உனக்கே உயிரானேன்…!

என்னை நீ

வாசிக்காமல் போனதில்

கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே

என்னை மொழியாக்கி

எழுதிய கவிதையை நீ

கிழித்தெறிந்ததில்தான்

கண்ணீர் சிந்தினேன்

உன்னால் முதல்தரம்

*

என் கவிதைகள்

அப்படி என்னதான்

பாவம் செய்தது

உன்னால்

பாவமாக்கப்பட்ட

எனக்கு

பிறந்ததை தவிர

*

உன்னைச் சுமந்தே

சுமைதாங்கியான

என் இதயம்

ஏன்

நீ இறங்கியதும்

இப்படி ஒற்றைக்

காலில் நிற்கிறது

*

யார் யாரோ என்னை

பறித்த போதெல்லாம்

உன்னோடுதானே

இருந்தேன்

எப்படி முடிந்தது

என்னை வேரோடு

பிடுங்கி

எறிந்துவிட்டு போக

*

என்னைப்போல்

உனக்காக

யாருமில்லை என்றாய்

உண்மைதான்

உன்னைப்போல் யாரும்

என்னை பொய்சொல்லி

ஏமாற்றியதில்லை...




0 comments:

Post a Comment